கழுகுமலைக்கு வாரீங்களா?
வெளிநாடு, அழகான பெரிய பெரிய நகரங்கள், பூங்காக்கள், வேடிக்கை வினோதங்கள் என பலவற்றை ரசிப்பதற்கு எனப் பல இடங்கள் இருந்நாலும், நாம் பிறந்த ஊர் என்பது எல்லாவற்றையும் விட என்றுமே சிறப்பாகத் தான் தெரியும். ('காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என அல்ல). இருக்கட்டும்... அப்படி என்ன சிறப்பு சொந்த ஊருக்கு என எண்ணுங்கால், பல விசயங்கள் விடையாக வரும்.. பெற்றோர், பிள்ளைப் பருவம், பள்ளிக்கூட அனுபவங்கள், (சிலருக்கு முதல் காதல்..), எனப் பட்டியல் நீண்டு கொண்டு போகும். பிற்காலத்தில் வாழ்க்கையில் கிடைத்த பலவும் இவைகளுக்கு முன்னால் ஒரு தூசு தான். எனது சொந்த ஊரில் எனக்கு மேற்சொன்ன பலவும் எல்லாரையும் போல எனக்கும் பிடித்திருந்தாலும், அதையும் தாண்டி பல விசயங்கள் பிடிக்கும், எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். எனவே தான் எனது சொந்த ஊரை, கழுகுமலை (கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டம்), தமிழக அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது (எப்போவோ அறிவிக்க வேண்டியது... ஆனால் தாமதம்). காலத்தினால் அழியா கல்வெட்டுகள், சிற்பங்கள் தான் சிறப்பே! ஊர் பெயரிலேயே மலை (கழுகுமலை) இருக்கிறது. ஆம் மலைகள் நடுவே ஊர் அமைந்துள்ளது. கழுகாசலமூர்த்தி (முருகப்பெருமான்) திருக்கோவில் இருப்பதாலும் 'கழுகுமலை' என ஊர்ப் பெயர் வந்ததாகக் கூறுவர். மலையின் பாதி உயர அளவில் சிற்பங்கள் உள்ளன. இங்கு கி.பி 8 - 9 ஆம் நூற்றாண்டு காலத்திய ஜைன உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை மூன்று வரிசைகளாக செதுக்கப்பட்டுள்ளன. (பார்க்க படம்). இதனோடு மகாவீரர், மற்றும் பல சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் ஜைன வகுப்புகள் அவ்விடத்தில் நடத்தப்பட்டுள்ளன.




1 comments:
படங்கள் அருமை.
உங்களால் ஒரு புதிய விசயம் தெரிந்து கொண்டதுடன் பார்த்தும் மகிழ்ந்தேன்.
நன்றி
Post a Comment