Thursday, July 19, 2007

ஜெர்மனியில் காற்றுடன் கன மழை

இன்று பிற்பகல் ஜெர்மனியில், பைராய்த்தில் காற்றுடன் கூடிய கனமழை அரைமணி நேரம் நீடித்தது. மரங்கள் முறிந்து சாலையில் குறுக்கே கிடக்கின்றன. வாகன நிறுத்துமிடத்தில் உள்ள மரங்கள் வாகனங்களில் சாய்ந்தும் பெருத்த சேதம் விளைந்துள்ளன. துவக்கத்தில் இடியுடன் துவங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்து கொண்டிருந்தது. திடீரென சப்தம் அதிகமாக கேட்கவே கண்ணாடி கதவின் வழியே பார்க்கும் போது கிரிக்கெட் பந்தில் ஐந்தில் ஒரு பங்கு உள்ள அளவு பனிக் கற்கள் விழுந்தன. நகரில் பூக்கடையின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டும், பனிக் கற்களாலும் சேதமடைந்தன. சாலைகளின் குறுக்கே ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். நகர நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து ஒடிந்து விழுந்த மரஙகளை அப்புறப்படுத்தி வருகிறது. இத்துடன் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. செல்பேசியில் இருந்து எடுத்த புகைப்படங்கள் என்பதால் சற்று தரம் குறைவாகவே உள்ளது. இதில் விழுந்த பனிக்கற்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சாலை ஓரத்தில் ஒதுங்கி இருப்பதையும் காணலாம். ஜெர்மனியில் இது போன்ற மழை வழக்கத்துக்கு மாறாக இருப்பதால் மழை பெய்யும் போது ஏற்பட்ட சப்தத்தில் ஜெர்மனியரின் முகத்தில் ஈயாடவில்லை.

0 comments: