Tuesday, April 27, 2004

கழுகுமலைக்கு வாரீங்களா?

வெளிநாடு, அழகான பெரிய பெரிய நகரங்கள், பூங்காக்கள், வேடிக்கை வினோதங்கள் என பலவற்றை ரசிப்பதற்கு எனப் பல இடங்கள் இருந்நாலும், நாம் பிறந்த ஊர் என்பது எல்லாவற்றையும் விட என்றுமே சிறப்பாகத் தான் தெரியும். ('காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என அல்ல). இருக்கட்டும்... அப்படி என்ன சிறப்பு சொந்த ஊருக்கு என எண்ணுங்கால், பல விசயங்கள் விடையாக வரும்.. பெற்றோர், பிள்ளைப் பருவம், பள்ளிக்கூட அனுபவங்கள், (சிலருக்கு முதல் காதல்..), எனப் பட்டியல் நீண்டு கொண்டு போகும். பிற்காலத்தில் வாழ்க்கையில் கிடைத்த பலவும் இவைகளுக்கு முன்னால் ஒரு தூசு தான்.

எனது சொந்த ஊரில் எனக்கு மேற்சொன்ன பலவும் எல்லாரையும் போல எனக்கும் பிடித்திருந்தாலும், அதையும் தாண்டி பல விசயங்கள் பிடிக்கும், எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். எனவே தான் எனது சொந்த ஊரை, கழுகுமலை (கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டம்), தமிழக அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது (எப்போவோ அறிவிக்க வேண்டியது... ஆனால் தாமதம்).

காலத்தினால் அழியா கல்வெட்டுகள், சிற்பங்கள் தான் சிறப்பே! ஊர் பெயரிலேயே மலை (கழுகுமலை) இருக்கிறது. ஆம் மலைகள் நடுவே ஊர் அமைந்துள்ளது. கழுகாசலமூர்த்தி (முருகப்பெருமான்) திருக்கோவில் இருப்பதாலும் 'கழுகுமலை' என ஊர்ப் பெயர் வந்ததாகக் கூறுவர். மலையின் பாதி உயர அளவில் சிற்பங்கள் உள்ளன. இங்கு கி.பி 8 - 9 ஆம் நூற்றாண்டு காலத்திய ஜைன உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை மூன்று வரிசைகளாக செதுக்கப்பட்டுள்ளன. (பார்க்க படம்). இதனோடு மகாவீரர், மற்றும் பல சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் ஜைன வகுப்புகள் அவ்விடத்தில் நடத்தப்பட்டுள்ளன.



அடுத்ததாக ஆச்சர்யப்பட வைக்கும் விசயம் 'வெட்டுவான்கோவில்'. ஆம், இது மலையில் ஒரு மலைக்க வைக்கும் அற்புதமான அமைப்பு. கருங்கல் மலையில் 'கேக்' போல வெட்டி ஒரு கற்கோவிலைச் செதுக்கியிருக்கிறார்கள். ரம்பம் வைத்து மலையையே அறுத்து எடுத்தது போல, கற்கோவிலை அழகுற உருவாக்கியிருக்கிறார்கள். கீழே உள்ள படம்.



இக்கோவிலின் உள்ளே கூட பிள்ளையார் கோவில் ஒன்றும் உள்ளது. (படத்தில் நடுவில் வெள்ளை அடிக்கப்பட்டுள்ள பகுதிதான் அதற்கு நுழைவாயில்..) கழுகாசலமூர்த்தி கோயில் என்று சொன்னேனே, அக்கோயிலின் கருவறையானது மலைக்குள் அமைந்துள்ளது. இக்கோவில் மலையின் அடிவாரத்தில் உள்ளது. 'கழுகுமலைச் சிந்து' அண்ணாமலை ரெட்டியார் பாடியுள்ளார். (இலக்கிய ஆர்வலர்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்).

பிறகு என்ன நேரம் கிடைக்கும் போது கழுகுமலைக்கு ஒரு 'விசிட்' அடிக்க வேண்டியது தானேbr>'Kalugumalai' பற்றி Google-ல் தேடல்

Friday, April 23, 2004

பிறந்த தேதி பதிவு செய்வீர்...


உங்கள் பிறந்த நாளை எனது பிறந்த நாள் புத்தகத்தில் பதிவு செய்யுங்களேன்.
பதிவு செய்ய இங்கே சுட்டுக.

Wednesday, April 21, 2004

எனது இணைய இணைப்புகள் பற்றி...

பழையன கழிதலும், புதியன புகுதலும் இருக்கும்போது ஆர்வம் கொஞ்சம் வரும் தானே!! இந்த இணையப்பக்கத்தில் இணைய இணைப்புகளில் பல புதிய இணைப்புகளைப் புதிதாகச் சேர்த்து இருக்கிறேன். பொங்குதமிழ் வரையிலான இணைப்புகள் யாவும் வலைப்பூக்கள் சம்பந்தப்பட்டவை. இந்த இணைப்புகளுக்குள் சென்றாலே மற்றைய அனைத்து இணைப்புகள் பற்றியும் பஞ்சமில்லாமல் கிடைக்கும். பொங்குதமிழ் convertor என்ற இணைப்பு உங்களுக்கு பலவகையான தமிழ் எழுத்துருக்களை யுனிகோடில் மாற்றித்தர உதவும்.

ஜெர்மனியில் உள்ள நண்பர்களின் வசதிக்காக 'வானிலை' இணையப்பக்கம் இணைத்துளேன். (திடீர் திடீரென மாறும் வானிலை மாற்றங்களின் தொந்தரவுகளை அனுபவிக்காமல் தவிர்க்கலாமே). இந்தியத் தொலைபேசி எண்களையும், முகவரிகளையும் தேடுவதற்கு 'தொலைபேசி எண் தேடல்' நன்றாக உதவும். Free SMS to India இணைய முகவரி, இணையம் (Internet) மூலம், இந்திய செல்பேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்ப ஏதுவாக இருக்கும். புதுவிதக் கிரிக்கெட் முயற்சி செய்து பாருங்கள். ஆன்மீகத்தில் (கிறிஸ்தவத்தில்) ஈடுபாடு உள்ளவர்களுக்காக தமிழ் கிறிஸ்தவப் பாடல்களும், இன்றைய பிரார்த்தனனயும் (நாள்தோறும் புதுப்பிக்கப்படுகிறது). மற்ற சமய இணைப்புகளும் தர உள்ளேன்...

ஒரு முக்கியமான செய்தி... பொன்மொழி விரும்புவர்களுக்காக தினமும் 'இன்றைய பொன்மொழி' என்ற பகுதியில் நாள்தோறும் புதுப்பிக்கிறேன்...

இன்னும் பல சுவையான தகவல்களோடு பிறகு சந்திக்கிறேன்.

Monday, April 19, 2004

ஊர்வலமாம்...ஊர்வலமாம்

தன்னுடைய ஆற்றலும், திறமைகளும், குறிப்பிடத்தக்க பல பண்புகளும் தனக்கே பல நேரங்களில் தெரியாமல் இருக்கலாம். அதே நேரத்தில் யாருடனாவது ஒப்பிட்டு பார்க்க சந்தர்ப்பம் வரும் போது, 'அடேங்கப்பா, நான் இவ்வளவு விசயங்களில் வித்தியாசமா இருக்கிறேனா?' என எண்ணத் தோன்றும். தனி மனிதனுக்கே இந்தப் பாடு என்றால் நாடு என்று வரும் போது சொல்லவே வேண்டாம், நமது பாரத நாட்டில் நாம் இருக்கின்றபோது, அங்கு என்ன நடக்குது என அவ்வளவு உன்னிப்பாக கவனிப்பது கிடையாது.

சரி விசயத்துக்கு வருகிறேன்... நான் எனது பல்கலைக்கழகத்தில் (ஜெர்மனி) ரசித்த ஒரு சுவராசியமான வழக்கத்தைச் சொல்கிறேன்... இந்தியப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் (Ph.d degree) வாங்கும் அன்று, கிட்டத்தட்ட ஒரு கல்யாணம் போன்று விருந்து கொடுப்பார், முனைவர் பட்டம் வாங்குபவர்... (அவரது தகுதிக்கும் மீறி சில நேரங்களில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்). ஆனால் பட்டம் வாங்குபவரை பல்கலைக்கழக வளாகம் முழுக்க பவனியாக காரிலோ, குதிரை வண்டியிலோ, (மாட்டு வண்டியிலோ :-) ) அழைத்துச் செல்லும் வழக்கம் எனக்குத் தெரிந்து கிடையாது.. ஆனால் நான் தற்போது ஆராய்ச்சிப் பயிலும், பைரோ·த் பல்கலைக்கழகத்தில் (ஜெர்மனி), சற்று வித்தியாசமான நடைமுறை இன்று வரை உள்ளது...

அதுதாங்க... பட்டம் வாங்குபவரை பல்கலைக்கழக வளாகம் முழுக்க பவனியாக அழைத்துச் செல்வது... (ஆனால் இவ்வழக்கம் ஜெர்மனியில் கூட பல பல்கலைக்கழகங்களில் இல்லை எனக் கேள்விப்பட்டேன், நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.) இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், எந்த பேராசிரியரிடம் அந்த மாணவர் ஆராய்ச்சி பயின்றாரோ, அந்த பேராசிரியர் தான் பவனியை நடத்துவார். இது என்ன பெரிய கஸ்டமா? என நீங்கள் எண்ணுவது புரிகிறது... பவனிக்கு அவர்கள் பயன்படுத்தும் வாகனம் காரோ, குதிரை வண்டியோ அல்ல, மாறாக கைவண்டி... (உடன் பயிலும் மாணவர்கள், அவர் ஈடுபட்ட ஆராய்ச்சிக்கு ஏற்ப வண்டியை பலவாறு அலங்காரப்படுத்தி.. இல்ல... இல்ல.. அலங்கோலப்படுத்தியிருப்பர்). அந்தக் கைவண்டியை அந்த பேராசிரியர்தான் இழுத்துச் செல்ல வேண்டும்... மாணவர் குண்டாக இருந்தால் பேராசிரியர் நிலை திண்டாட்டம் தான்.

இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது.. எனது பேராசிரியரையும், சமீபத்தில் முனைவர் பட்டம் வாங்கிய எனது சகதோழரையும்



இம்...இம் நானும் அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கிறேன்.

Sunday, April 18, 2004

தேடல்...

நான் இந்த இணையப் பக்கத்தை ஆரம்பக்கூடிய சூழலை ஏற்படுத்தி, இதன் எளிய முறைகள் பற்றி அறிமுகப்படுத்தியவர் எனது கல்லூரித் தோழர் திரு. முத்து (ஜெர்மனி). தனக்கென்று தனி இணையப் பக்கத்தினை வைத்துக் கொண்டு, அளாவுவது என்பது தனி ஆனந்தம் தான். அதிலும் பலனுள்ள பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டால், சொல்ல வேண்டியதேயில்லை.

எனக்கு புதியதாய் இருந்தாலும், சற்று புதிராய் (சில விசயங்கள்..), சிரமமாய் இருந்தாலும், ஏன் முயற்சி செய்யக்கூடாது...? என்ற ஒரு உந்துதல் தான், என்னுடையக் கருத்துக்களை உங்களிடம் சேர்த்துக் கொண்டு இருக்கிறது.

ஆராய்ச்சிப் பழு அதிகம் இருப்பினும், ஒரு தேடல் என்னவோ தொடர்கிறது... சொல்லப்போனால் ஆராய்ச்சியும் கூட ஒன்றைப் பற்றிய, வரைமுறை, நிபந்தனை அற்ற தேடல் தானே...

ஒரு திரைப்படப் பாடல் வரி ஞாபகத்திற்கு வருகிறது.."தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி எடுக்கும்..."

இன்னும் வளரும்...

Friday, April 16, 2004

கற்றது கை மண்ணளவு

சில நாட்களாவது கொஞ்சம் கடினமாக ஈடுபட்டு html ல் மாற்றங்கள் செய்யலாமெனச் செய்தபோது தான், பல தெரியாத விசயங்கள் தெரிய வந்தது.. அதனால் தான் உங்கள் கருத்துக்களை இங்கு அளிக்க முடிகிறது...உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது!!!
வளரும்....

Tuesday, April 13, 2004

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்காக ஒரு செய்தி... தமிழ் நேயர்களுக்கு புத்தாண்டு பரிசாக, 2003-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28-ம் நாளன்று சீன வானொலி தமிழ் ஒலிபரப்பினை இணையதளத்தில், நமது தமிழ் நிகழ்ச்சிகளை துவக்கியுள்ளது. 1998-ம் ஆண்டிலிருந்து அந்நிய மொழிகளில் இணைய தளத்தை பயன்படுத்த துவங்கியது. சீனர்கள் நமது தமிழ் மொழியின் மீது பற்றுக்கொண்டு, 1963-ம் ஆண்டு வானொலி மூலம் தமிழ் ஒலிபரப்பை துவக்கி இன்று வரை பல்லாயிரக்கணக்கான நேயர்களை தன் வசம் வைத்திருக்கிறது.

சீனாவுக்கு உலகையும், உலகுக்கு சீனாவையும் தெரியப்படுத்தும் முழு நோக்கில் சீனாவின் ஜன்னலாக இந்த www.cri.com.cn என்னும் இணைய தளம் இருக்கின்றது. அவர்களின் மின்னஞ்சல் முகவரி tamil@cri.com.cn நமது நண்பர்கள், இந்த இணைய தளத்தை பயன்படுத்தி, அன்றாட நிகழ்வுகளை கேட்டு மகிழலாம். தெளிவான குரல் வளத்தில் தமிழ் மொழியில் சீனர்கள் பேசுவது செவிக்கு விருந்து அளிக்கின்றது. சந்திப்போம்...