Wednesday, November 30, 2005

தமிழா தலை நிமிர்!

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்து விட்ட போதும் ஏன் தமிழா உன் கரங்களுக்கு ஆட்சியாளர்கள் முன்னால் முடக்கம். உன்னில் ஒருவர் தானே, உன்னை ஆள்பவரும்.. வீறு கொள்.. அச்சம் தவிர்..ஆட்சியாளர்களை மனிதனாகப் பார்.. ராஜ வம்சத்தினராய் பார்க்காதே!

அக்கினிச் சிறகுகளில் சில...

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஈடுப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம், நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எழுதிய "அக்னிச் சிறகுகள்". இப்புத்தகத்தை பலமுறை படித்து இருக்கிறேன். அதில் விஞ்ஞானம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

  • விஞ்ஞானம் , ஒரு தணியாத தாகம்; சாத்தியங்களையும், உறுதியான விளைவுகளையும் தேடப்போகும் ஒரு முடிவில்லாத பயணம்.
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்காகவே சொல்வதாக இந்த வாக்கியம் அமைந்துள்ளது.
  • முதலாவதாக உங்களுடைய கல்வியையும், திறமைகளையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவாற்றல் தான் நிதர்சனமான, நிலையான சொத்து. உங்கள் வேலையில் பயன்படும் மிக முக்கியமான சாதனமும் இதுதான். எந்த அளவுக்கு உங்களுடைய அறிவுத் திறனால் இப்போதைய நிலவரம் வரை தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சுதந்திரமான மனிதர்.
இதுவரை படிக்கவில்லையென்றால், படித்துப் பாருங்கள். அக்னிச் சிறகுகள் உங்கள் நம்பிக்கையின் சிறகுளைப் பலப்படுத்தும்.